அன்பின் முகவரி

அன்னை தெரசாவின் பிறந்த நாள் விழா சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அன்பையும் கருணையையும் மட்டுமே பரப்பிய அந்த உன்னதமான அன்னையை உலகமே நினைவுகூர்ந்தது. ஆனால், இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களில், வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடப்பதுண்டு. அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவது குறிந்து எழுந்துள்ள சர்ச்சைகளே, இந்த இடத்தில வருத்தமான விஷயங்களாக உள்ளன.

புனிதர் பட்டமென்பது, இறந்த ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதற்கான அடையாளம். இந்தப் புனிதர் பட்டத்தை அளிக்கும் அதிகாரம், ரோமன் திருச்சபை வசம் உள்ளது. இந்தப் புனிதர் நிலையை அடைய, மூன்று நிலைகளில் தேர்வு பெற வேண்டும்.

அதாவது, ஒருவர் முதலில், இறைப் பணியாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, அவர், வணக்கதிற்க்குரிய்வராக அறிவிக்கப் பட வேண்டும்.

மூன்றாவது நிலையாக, அருளாளர் நிலை.


இந்த நிலைகளைத் தன் சேவைகளால் கடந்த அன்னை, அவரது, மறைவுக்குப் பின், புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான, முக்திப் பேரு நிலையை அடைந்துவிட்டரா? அதாவது, ஏதாவது அற்புதங்கள் செய்திருக்கிறாரா, என்பது தான் இப்போது கேட்கப்படும் கேள்வி.

19 . 10 . 2003 . இல், அன்னை அருளாளர் பட்டத்தை அடைய, எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்து, அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் பிறகு, புனிதர் பட்டம் கொடுப்பதுதான் சரியென்று, அன்னையை அறிந்தவர்களும், அவரை நேசித்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

முன்பே கூறியதுபோல், அருளாளர் பட்டம் பெற ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி, மோனிக்கா பெஸ்ரா என்ற இந்திய கிறிஸ்த்தவப் பெண்ணின், வயிற்றில் இருந்த கட்டி, அன்னை தெரேச உருவம் பதிக்கப் பட்ட சங்கிலியை அணிந்ததும், பூரண குணமாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனையே அற்புதமாக அங்கீகரிக்கலாம், என்று அன்னையின் அபிமானிகள் சொல்கிறார்கள். அன்னையின் உருவத்தில் இருந்து புறப்பட்ட ஒளி வெள்ளம், புற்றுநோய்  கட்டியை குணப்படுத்தியதாக மோனிக்கா பெஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, பத்திரிக்கையாளர் ஒருவர், "தெரசாவின் நோக்கம், மக்களுக்கு உதவி செய்வதல்ல. நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துகிறேன் என்று பொய் சொல்லி நன்கொடைகளைப் பெற்றவர். அவர் ஏழ்மையைப் போக்க உழைக்கவில்லை, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே குறியாக இருந்தார்" என்று அவதூறு கூறி இருக்கிறார்.

ஆனாலும் திருச்சபை, "பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி மறைந்ததை, அன்னையின் அற்புதமாக அங்கீகரித்து, அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது உண்மை. ஆனால், அவர் புனிதர் பட்டம் பெற இன்னுமோர் அதிசயம் நிகழ வேண்டும்" என்று அறிவித்துள்ளது.

இந்தச் செய்திகளைப் படிக்கும்போது, எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அன்னை வாழ்ந்த காலத்தில், அவர் செய்த சேவைகளும், காட்டிய அன்பும் அனைவரும் அறிந்ததே. இந்த உலகத்தில் அவர் பரப்பியது மனித நேயம் மட்டுமே. இதனை உலகமே உணர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது, ஒருவர் அன்னையைப் பற்றி அவதூறு கூறுவது, வேதனையாக உள்ளது.

அடுத்ததாக, அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றி நடந்து வரும் விவாதங்கள். அன்னையின் தூய்மையான அன்பை, அறிந்த உலகமே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் கிறித்துவ திருச்சபையின் விதிகள் அதனைத் தடுக்கிறது எனும்போது, வருத்தம்தான்.

ஆனால் அன்னை தெரசா, புனிதர் பட்டத்தை விட உயர்ந்த பட்டத்தை அவர் வாழ்நாளிலேயே பெற்று விட்டார்.

ஆம். கிட்டத்தட்ட அவரது பெயராகவே மாறிவிட்ட "அன்னை" என்ற பட்டம், புனிதர் பட்டத்தை விட மேலானதல்லவா?

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லப் பட்டதில், முதன்மை நிலையாக இருப்பது, மாதா எனும் அன்னை தான். ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளிடம் கருணை காடுவாலோ, அப்படி இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் பாரபட்சமின்றி அவர் அன்பு செலுத்தியதால், உலகமே அவரை அன்னையென்று அழைக்கிறது. அவரது அப்பழுக்கற்ற தூய்மையான அன்புக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரம் இது.

இதனை விட மேலான நிலையாக புனிதர் பட்டதை நான் கருதவில்லை. அப்படியே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதென்றாலும், இந்த மாசற்ற அன்னையென்ற அங்கீகாரம் ஒன்றே போதுமே. அவர் உலக மக்களிடம் செலுத்திய அன்பு அதற்கு சாட்சியாக இருக்குமே?

இன்று உலகில், தன்னலமற்ற, உண்மையான, சேவை செய்பவர்களும், கருணை, அன்பு செலுத்தி மனித நேயத்தைப் பரப்புபவர்களும் வெகு சிலரே. அத்தைகைய அன்னை தெரசாவை நிச்சயம் உலகம் அங்கீகரிக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U