அதிகார அழிவுகள்

"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?"

"நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது"

கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனும், புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர். அவர்களும் பாடும் பழைய பாடல் இது.

இதன்படி, உலகத்திலே பயங்கரமான போதை வஸ்து எது? என்று கேட்டல், அதிகாரம் என்று சொல்லலாம்.

போதை வஸ்துக்கள் அனைத்தும், மனிதனுக்கு அறிமுகமாகி, அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்ல அவனை ஆட்சி செய்யத் தொடங்கிவிடும்.கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அழித்துவிடும்

அது போல, அதிகாரம் என்றவொன்று கையில் கிடைத்தவுடன், மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். தனக்கு கீழ்ப்படியவும், தனது கட்டளைகளை ஏற்று நடக்கவும் உலகமே காத்திருக்கிறது என்ற எண்ணத்தில், அவர்களை ஆட்டிப் படைக்க நினைக்கிறான். அதுவே அவனது அழிவுக்கு வழிவகுத்துவிடுகிறது.

ஆசையே மனிதனின் எதிரி, என்று புத்தர் சொன்னார். அப்படிப் பார்த்தால், மனிதனுக்கு, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவைதான் முதன்மையான, கேடுவிளைவிக்கக் கூடிய ஆசைகள். இதில் அதிகாரம் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா? இந்த அதிகாரம் இவை மூன்றுக்கும் மேலாக இருக்கிறது. எப்படி என்றால், அதிகாரம் இருந்தால், இந்த மூன்றையும் அடையலாம் என்பது மனிதனின் எண்ணம்.

இதுவே இன்றைய அரசியல்வதிகளுக்கும் பொருந்தும். அதிகாரம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில், செயல்படுகிறார்கள்..எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம் என்று எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சியைப் எதிர்த்து குரல் எழுப்புவதெல்லாம் இந்த அதிகார   துஷ்ப்ரயோகத்தால்தான்.

"தத்துவஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்" என்றார் கிரேக்க அறிஞர் பிளாடோ.தத்துவ ஞானிகள் என்பவர்கள், இந்த அதிகாரத்தின் தத்துவத்தை உணர்ந்தவர்கள். அந்த போதைக்கு அடிமையாகாமல், சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்பதுதான் இதன் கருத்து.

ஒரு மனிதன், தனக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களிடம் எப்படி மரியாதை செலுத்துகிறான், என்பதை வைத்து அறியப்படுவதில்லை. அவனுக்கு கீழே உள்ளவர்களை எப்படி மதிக்கிறான் என்பதை வைத்தே, அறியப்படுகிறான். அவனது குணம் வெளிப்படுகிறது. அதிகாரத்தில் உள்ள சிலர், தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், மக்களையும், அடிமைகளாக கருதுகின்றனர்.

அண்மையில் ஒரு அமைச்சர், "நான் ஒரு I. A. S. அதிகாரியாகியிருந்தால், கார் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறியிருந்தது, அவர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது எண்ணத்தில்தான்.இந்த எண்ணத்தால், அவர்களின் படிப்பையும், தகுதியையும் மதிப்பதில்லை.

இந்த சர்வாதிகாரிகள், தங்களின் அழிவை தாங்களே தேடிக்கொள்கின்றனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்திலிருந்தே, இவர்களை அழிக்கும் சக்தி புறப்படுகிறது. இது வரலாற்றில் பல முறை நிரூபணமாகியுள்ளது. ரஷ்யப் புரட்சியும், பிரெஞ்சுப் புரட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

நமது புரானங்களிலும் இந்த கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.கம்சனும், மகிஷனும், நரகாசுரனும், தங்களது செயல்களாலேயே அழிவைத் தேடிக்கொண்டனர். இவர்களின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தின் தன்மையை உணர்த்தவே, இந்த புராணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

சர்வாதிகாரமும், அதிகார துஷ்ப்ரயோகமும் அரசியலிலும், ஆட்சி செய்பவர்களிடம் மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள், தங்களின் சக்திக்கு ஏற்ப அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, சில காவல் துறை அதிகாரிகள், தங்களுக்கு கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களை, தங்களின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வது, அலுவலகத்தில் மேலதிகாரிகள், கீழ்மட்ட ஊழியர்களை அடிமைபோல் நடத்துவது என்று அனைத்து மட்டங்களிலும் இந்த அதிகார போதை பரவியுள்ளது.

நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியும், கறுப்பின மக்களின் விடிவேல்லியகத் திகழும் நெல்சன் மண்டேலாவும், அவர்களுக்கிருந்த அதிகாரத்தை உபயோகித்து இந்த உலகையே ஆண்டிருக்கலாம். ஆனால் காந்தி, அவருக்கு அளிக்கப்பட தல்வைவர் பதவியை மறுத்துவிட்டார். மண்டேலா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொளும்படி தேசமே கேட்டுக்கொண்டபோதும், மறுத்து வேறொருவருக்கு வழிவிட்டு விலகினார். அதிகாரத்தின் தனமையை அறிந்ததாலும், மக்களுக்கு சேவை செய்ய, அதிகாரம் தேவையில்லை என்பதை உணர்ந்ததாலுமே இவர்கள் இன்றும் சிறந்த தலைவர்களாக மனிதர்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதிகாரம் என்பது, மக்களை நெறிப்படுத்தி, சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்காகவே வழங்கப்படுகிறது. அவர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்ய அல்ல.
இப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களின் அழிவுக்கு வழிவகுதுக்கொள்ளும், எத்தனையோ பேரை சமகால வரலாற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எண்டும் கூற்றை மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்துபவர்கள் இவர்களே.சர்வாதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்தே, அவர்களுக்கான் அழிவுசக்தி பிறக்கிறது.தாங்கள் செயல்களாலேயே எதிரிகளை உருவாக்கி, தங்களை அழிக்கும் ஆய்தத்தையும், இந்த சர்வாதிகரிகளே கொடுத்துவிடுகின்றனர். ஹிட்லர், ரஷ்ய ஜார் மன்னர்கள், போன்றவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணங்கள்.

ஆட்சியாளர்கள், தங்களுக்கு வழங்கபப்ட்டிருகும் அதிகாரத்தை, ஆக்க சக்தியாக மட்டுமே பயன்படுத்தி, மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே அதனை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால், இன்றில்லை என்றாலும் விரைவில், அவர்ளது செயல்களுக்கு மக்கள் மத்திய்லிருந்து, எதிர்ப்பும், புரட்சியும் கிளம்பி இவர்களை அழித்துவிடும். மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தோன்றி, மக்களையும், ஆட்சியாளர்களையுமே அழித்துவிடும்.இதனை உணர்ந்துகொண்டு இன்றைய அரசியல்வாதிகள் செயல்படவேண்டும் 

1 கருத்துரைகள்:


“யார் இந்த மகாத்மா?”

வாழ விரும்பிய மக்களை
வாழ்க்கை தளத்தில் இருந்து
வழுக்கி விடவே வழுக்கை தலை.
இந்திய சமஸ்தானங்களில் சாதியை ஒழிக்க
ஈ.வெ.ராமாசாமிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை
ஊடுறுவி பார்க்கவே மூக்கு கண்ணாடி

பார்ப்பன பன்னிகளின் அருமை பெருமைகளை
பேசுவதற்கே பற்களற்ற பொக்கை வாய்.

பிர்லாவின் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டே
இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை
நெறிப்பதற்காகவே நீண்டு வளர்ந்த
இரு கைகள்

உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தை
அடக்கி ஒடுக்கவே கையில் கைத்தடி

குஜராத் பனியாக்களின் சொத்துக்களையும்
இந்திய நிலப்பிரபுக்களின் நிலங்களையும்
உழைக்கும் மக்கள் பறித்துவிடுவார்கள்
என்பதற்காகவே, தன்னை பின்பற்ற கோரி
ஒரு முழவேட்டியை உடலில் சுற்றி கொண்ட
எளிமையின் உருவம்,

வெள்ளை எசமானர்களுக்கு சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின்
கழுத்தை முறித்த துக்குகயிறை பார்த்து
புன்னகைத்த முகம்

உலகம் கடவுளுக்கு கட்டுபட்டது
கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுபட்டது
இதனை அன்றே சொன்னான் மனு

ஆம்
மக்கள் கடவுள்கள்
காந்தி என்ற மந்திரத்துக்கு கட்டுபட்டவர்கள்
காந்தி என்ற மந்திரமோ பார்ப்பன-பனியாக்களுக்கு
கட்டுபட்டது.
புரிகிறதா?
மணுதர்ம குப்பையில் உருபெற்று எழுந்த
20ம் நூற்றாண்டின் மனுதான்
பொக்கைவாய் காந்தி
அவனின் மக்கள் விரோத பாசிச செயல்களுக்கான
பட்டம்தான் ‘மகாத்மா’ என்பது

மொத்தத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில்
தங்களை அர்ப்பணித்து கொண்ட மாவீரர்களை
வெள்ளையனிடம் காட்டி கொடுக்கும் துரோக
கதாபாத்திரம் தான்
மகாத்மா காந்தி

வரலாறுதோறும் அந்த துரோகம் மீண்டும் மீண்டும்
உருபெற்று எழ முயலும்
நாம் அது உருபெற்று எழும் மனுதர்ம குப்பையை
சோசலிச தீயிட்டு கொலுத்துவோம்
மாமேதை மார்க்ஸ் நமக்கு இதனைத்தான்
கற்பிக்கிறார்.


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U