இனவெறியா? கொலைவெறியா?

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல். கடந்த வாரம்  நிதின் கார்க் என்ற பஞ்சாபி இளைஞர் ஆஸ்திரேலியாவில் கொடூரமாக கொல்லப்பட்டார்.இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றும் ஒரு இந்தியர் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாகவே ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடந்துள்ள சம்பவங்களும் உள்ளன.

இந்த தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வேதனைக்குரியதாக உள்ளது. அங்கு நடந்து வரும் கொலைகளையும் தாக்குதல்களையும் இந்திய ஊடகங்களே பெரிதுபடுதிகின்றன என்றும் இது போன்ற சம்பவங்கள் மும்பை டெல்லி போன்ற நகரங்களிலும் நடக்கின்றன என்று நம்மையே உதாரணமாக கூறியிருக்கிறார்கள். இது அந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

இதற்கிடையில் இந்தியர்கள் மீது நடத்தப்படுவது இனவெறித் தாக்குதலா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசாங்கம் இதனை இனவெறி தாக்குதல் என்று கூற முடியாது என்றும் இந்திய அரசாங்கமும் இதனை இனவெரியாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இவற்றைவிட முக்கியமானது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் கூறியிருப்பது தான். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்திய ஊடகங்கள் தான் இனவெறி அடிப்படையிலானது  என்று பெரிதுபடுத்துகின்றன என்றும் பரபரப்புக்காக இத்தகைய செய்திகளை வெளியிடுகின்றன என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இனவெறி அடிப்படையில்தான் நடக்கிறது என்று நாம் தீர்மானமாக சொல்லிவிட முடியாது என்றாலும் கடந்த ஒரு வருட காலமாக இந்தியர்கள் குறி வைத்து தாக்கப்படுவதைப் பார்க்கும்போது இனவெறியே காரணமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கையும் நம்மை சிந்திக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவிலிருந்து நிறைய மாணவர்கள் மேல்படிப்புக்காக செல்கிறார்கள். ஆனால் அங்கு சூழ்நிலை சரியில்லாததால் மாணவர்கள் வேறு நாடுகளை தேர்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் வேறு நாடுகளுக்குச் சென்று கற்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். பெரும்பான்மையான இந்திய இளைஞர்கள் தங்களின் மேற்ப்படிப்புக்கு ஏற்ற இடமாக ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அங்கு கிடைக்கும் தரமான கல்வி தான் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அமைச்சர் அத்தகைய கல்வியை வேறு நாட்டில் கற்குமாறு கூறுகிறார்.

இதன் அர்த்தம் என்ன? இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் தான் தரமான கல்வியை கற்க முடியுமா? அத்தகைய தரமான கல்வியை இந்தியாவில் வழங்க முடியாதா?

என்ன வளமில்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்று சுதந்திர காலம் முதல் பாடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதன் அர்த்தத்தை உணரவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கற்கும் கல்வியை விட அதிசிறப்பான கல்வியை நம் நாட்டிலேயே வழங்க வேண்டும். பொறியியல் துறையிலும் அறிவியல் விஞ்ஞானத் துறையிலும் இந்தியா எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இந்தத் துறைகளில் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். இத்தகைய திறமை நம்மிடம் இருக்கும்போது அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொல்ல்வதில்லை என்பதே உண்மை.

சமச்சீர் கல்வி பற்றிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்திய மாணவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று படிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தால் நமது கல்வியின் தரத்தை உயர்த்துவது எப்போது? எதிர்க்காலத்தில் வெளிநாட்டினர் மேற்படிபிற்க்காக இந்திய வரும் சூழ்நிலை உருவாக வேண்டும். அத்தகைய மாற்றம் உருவாக வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்திய அரசாங்கம் தன தவறுகளை உணர்ந்துகொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் கூறியிருப்பது இன்னும் வேதனையாக உள்ளது. அங்கு நடக்கும் தாக்குதல்களை இந்திய ஊடகங்களே இனவெறி என்று பெரிதுபடுத்துகின்றன என்று வருத்தப்பட்டுள்ளனர். இது ஆஸ்திரேலியாவில்  தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்க்குக் காரணம் நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை தான்.

இந்த நிலை மாற வேண்டும். இந்தியர்கள் மட்டுமல்லாது உலக நாட்டினர் அனைவரும் வாழ விரும்பும் நாடாக இந்திய மாற வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வர இந்தியர்கள் அனைவரும் ஒன்றுகூடி முயற்ச்சிக்க வேண்டும். அரசாங்கம் கண்டனம் தெரிவிப்பதை விட்டுவிட்டு செயல்களில் இறங்க வேண்டும்.

பிரபஞ்ச ரகசியம்

தொலைகாட்சி, சினிமா என்று பல பொழுதுபோக்கு அம்சங்கள் வந்த பின்பும் புத்தகங்கள் தங்களுடைய மதிப்பை இழக்கவில்லை. இன்றைய சிறுவர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைத்திருந்தாலும், மழுங்கிவிடவில்லை. புத்தகங்கள் நமது கற்பனை சக்தியை வளர்க்கின்றன. இந்த உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றியும் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கும் பாடப் புத்தகங்களைத் தவிர இந்த உலகம் என்னும் கடலை அளக்க உதவுவது இந்த புத்தகங்களே. இணையத்தை போலல்லாது புத்தகங்களின் நம்பகத்தன்மையும் அதிகம்.

சமீபத்தில் ஒரே கருத்தைப் பற்றிய மூன்று புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. இரண்டு ஆங்கில புத்தங்களும் ஒரு தமிழ்ப் புத்தகமும். The Secret, The Power of your Subconscious Mind என்ற ஆங்கிலப் புத்தகங்களும், அடுத்த வினாடி என்ற தமிழ் புத்தகமும். இம்மூன்று புத்தகங்களும் இந்த உலகில் உள்ள ஒரு ஒப்பற்ற சக்தியைப் பற்றி விளக்குகின்றன. இந்த பிரபஞ்சத்தை இயக்கம் சக்தியைப் பற்றி விரிவாக அலசுகின்றன. நமது மனமே அந்த சக்தி.

நமக்குத் தேவையான அனைத்தும் நம்மிடமே உள்ளது. நமது மனம் நம்மை இயக்குகிறது. அதனை இயக்க நாம் கற்றுக்கொண்டால் நமது லட்சியங்களை எளிதாக அடைய முடியும். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை இந்த புத்தகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

நமது மனத்தில் நாம் விதைக்கும் எண்ணங்கள் நமது வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன. நாம் மனத்தில் நினைத்த விஷயம் ஒன்று நிஜத்தில் நடத்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். உதாரணமாக நாம் எதோ ஒரு சினிமா பாடலைப் பற்றி சிந்தித்துக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருக்கும்போது அந்த பாடல் சிறிது நேரத்திற்குள் எதோ ஒரு தொலைக்காட்சியிலோ வானொலியிலோ ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். இதற்க்குக் காரணம் நமது எண்ணங்களே. நம்மையும் அறியாமல் நமது ஆழ்மனதில் அந்த பாடலைப் பற்றி நாம் சிந்திதிருக்கிறோம். அது பின்னர் நிஜத்தில் நடந்துள்ளது. இதைத் தான் இந்த புத்தகங்கள் நம் ஆழ்மனதின் ஆற்றல் என்று கூறுகின்றன.

நமது ஆழ்மனதில் விதைக்கப் படும் எந்தவொரு எண்ணமும் நிறைவேற்றபப்டுகிறது. நமது ஆழ்மனதே  நம்மை வழிநடத்திச் செல்கிறது. நம்முடைய எண்ணங்களே நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.இதன் அர்த்தம் இது தான். ஒரு குழந்தை பிறக்கும்போது ஒன்றும் அறியாமல் பிறக்கிறது. பிறகு அதன் மனதில் பதிக்கப்படும் அல்லது பதியும் எண்ணங்களே அதன் குணாதிசயங்களை தீர்மானிக்கிறது.

Da Vinci Code என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய Dan Brown இன் புதிய புத்தகமான The Lost Symbol அமெரிக்காவில் உள்ள மேசொன்ஸ் என்ற ஆன்மீக வகுப்பினர் நீண்ட காலமாக பாதுகாத்து வரும் ரகசியத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அந்த ரகசியம் மனிதனுக்குள்ளே உள்ள சக்தியாகும். கடவுள் என்பவர் மனிதனுக்குள்ளே இருக்கிறார் என்பதே அதன் தத்துவம். இதனையே இந்த புத்தகங்களும் பறைசாற்றுகின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்திய ஆன்மீக குருமார்களும் இந்த கருத்தையே வலியுறுத்துகின்றனர். அஹம் பிரம்மாஸ்மி என்ற கருத்து இன்றும் ஹிந்து மதத்தில் உண்டு. உலகம் பல வருடங்களாக விடை தேடிக் கொண்டிருந்த கேள்வி, கடவுள் இருக்கிறாரா என்பது. அந்தக் கேள்விக்கு இந்த புத்தகங்கள் தெளிவாக பதிலளித்துவிட்டன.

தன்னை அறிந்தவன் கடவுள் என்ற கூற்றுக்கு அர்த்தம் நமது மத்தின் ஆற்றலை நாம் உணர வேண்டும் என்பதே. நமது முன்னோர்கள் உபதேசித்துள்ள தியானம் நமது மனத்தை ஒருமுகப் படுத்தத் தான். மனம் ஒருமுகப்படும் போது, அதில் உள்ள எண்ணங்கள் வலுப்பெறுகின்றன. நமது நம்பிக்கை அதிகரிக்கிறது.

நமது மனதின் ஆற்றல்களை உணர்ந்து நமது இலட்சியங்களை அடையவும் நமது வாழ்க்கைப் பாதையை நாமே அமைத்துக் கொள்ளவும் இந்தக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா? எந்த மதக் கடவுள் பெரியவர்? போன்ற விவாதங்களை ஒதுக்கிவிட்டு நமது மனத்தின் சக்தியை ஆக்கபூர்வமாக செயல்ப்படுத்துவோம்.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U