உதவியின் தன்மை

பேரறிஞர் ஐயா பெரியார் அவர்கள், பிறருக்கு உதவுவதை தன்னுடைய கொள்கையாக வைத்திருந்தார். ஆனால் அவர் என்றுமே நன்றியை எதிர்பார்த்து எந்த உதவியும் யாருக்கும் செய்ததில்லை.

ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், "ஐயா தாங்கள் தொடர்ந்து போராடவில்லை என்றால் வகுப்புரிமை, சட்டமாகியிருக்காது.அதை தமிழர்கள் நினைத்துப் பார்க்காவிட்டாலும், தினமும் உங்களிடம் வந்து பரிந்துரை வாங்கிச் செல்லும் நபர்களாவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு நாளைக்கு குறைந்தது இருபது பேராவது தங்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிச் செல்கிறார்கள், ஆனால், பத்து நாளைக்கு ஒருவர் கூட உங்களை சந்தித்து நன்றி சொல்வதில்லையே" என்று வேதனைப்பட்டார்.

இதைக் கேட்டு சிரித்த பெரியார், "இவ்வளவுதானா உங்களுக்குத் தெரிந்தது? நான் தண்ணீர் பந்தல் வைத்து நடத்துகிறேன். அதில் தண்ணீர் பருகியவர்கள், தாகம் தீர்ந்ததும் நகர்ந்து செல்லாமல், நன்றி கூறிக் கொண்டிருந்தால், பிறருக்கு தண்ணீர் ஊற்றுவதும் தடைபடும்."

ஐயா பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்திருக்கும், உலகத்துக்கும் எத்தனையோ விஷயங்களை போதித்திருக்கிறார். ஆனால் இந்த ஒரு சம்பவத்தின் மூலம் அவர், மகத்தான கருத்துக்களை எளிமையாக விளக்கிவிட்டார். ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, ஓர் தலைவனும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒரு தலைவன் என்பவன், தனது கொள்கையிலும் அதனை அடைவதிலுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, தனது முயற்ச்சிகளுக்கான பலன்களை எதிர்பார்த்து அதில் மூழ்கிவிடக்கூடாது.

இன்றைய அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், தங்கள் கடமையைச் செய்வதற்கே,  லஞ்சம் எதிர்பார்க்கும்போது, தான் செய்த உதவிக்கு, நன்றி கூட எதிர்பாராத பெரியார், எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குக் காட்டிவிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U