யார் கடவுள்

ஹபிப் அஸ்மி எனும் துறவி ஒருவர், ஆற்றுக்கு நீராடச் சென்றார். ஆடைகளை ஆற்றங்கரையில் கழட்டி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், கரையில் இறந்த ஆடைகளைப் பார்த்தான். சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கு, ஞானி அஸ்மி, நீந்திக் குளித்துக் கொண்டிருந்தது தெரியவில்லை. யாரோ கவனமில்லாமல் இதனை விட்டுவிட்டு போய்விட்டார்கள். அவர் வரும்வரை, அந்த ஆடைகளைப் பாதுகாக்கத் தீர்மானித்து, அங்கு அமர்ந்துவிட்டான்.

வெகு நேரம் கழித்து குளித்துவிட்டு வந்த ஞானி, ஆடைகளை எடுக்கச் சென்றார். அவரைப் பார்த்த அந்த மனிதன், "ஐயா, உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் என்னாவது?" என்று கேட்டார்.

ஹபிப் அஸ்மி சிரித்துக் கொண்டே, "ஓஹோ! நான் ஆடைகளை இறைவன் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன். அவன் உங்கள் பொறுப்பில் விட்டுவிட்டான் போலிருக்கிறது." என்று அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் வாழ்வில் அன்றாடம் நடப்பதுண்டு. நாம் தொலைத்துவிட்ட ஒரு பொருளை யாரவது மீட்டுத் தந்தாள், அவர் நமக்குக் கடவுளாகத் தெரிவார்.ஆனால் அந்த சம்பவத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் இறைத் தத்துவம் எனும் சித்தாந்தம் இருக்கிறது.அந்த சித்தாந்தத்தையே எளிமையாக விளக்கிவிடும் கதை இது.

வழிப்போக்கன் ஒருவன், ஞானியின் ஆடைகளைப் பாதுகாக்கிறான். ஞானியோ, கடவுளே அந்தப் பொறுப்பை இந்த வழிப்போக்கனிடம் விட்டதாகச் சொல்கிறார். இப்போது சிந்தித்துப் பாருங்கள், ஒரு வேளை அந்த வழிப் போக்கன், ஒரு நாத்திகவாதியாக இருந்தால்? அவனுக்கு தான் அக்கறையோடு பாதுகாத்ததுதான் தெரியும். அதைக் கடவுள் செயலாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் நினைப்பதும் சரிதான். தன்னிச்சையாகத் தானே அந்த உடைகளை பாதுகாக்க முடிவெடுத்தான். பிறகு எப்படி அது கடவுளின் செயல் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியும்?

சரி அது அவனது செயல்தான். ஆனால் அவனை அப்படிச் செய்யத் தூண்டியது எது? அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். கேட்பாரற்றுக் கிடக்கும் ஆடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அவனுக்கு உணர்த்தியது அவனது மனம் தானே? அப்படியானால் அந்த மனமே கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

இல்லை, யாரோ ஆடைகளை விட்டுச் சென்றுவிட்டார்கள். அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அந்த நல்ல எண்ணம்தான் கடவுளா? அதாவது அடுத்தவர் பாதிக்கப் படக் கூடாது என்ற அவனது நல்லெண்ணம், கடவுளாக முடியுமா?

இவை எல்லாமே உண்மைதான். கடவுளின் குணம் என்ன? அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அத்தகைய எண்ணம் கொண்ட ஒரு மனிதன் ஏன் கடவுளாகக் கூடாது? அவனைப் பொறுத்தவரை, தானாகத் தான் எந்த காரியத்தையும் செய்கிறான். அந்தக் காரியத்தை அவனைச் செய்யத் தூண்டும் மனமே கடவுள். கடவுளை அறிந்தவனும் உணர்ந்தவனும் அப்படி ஏற்றுக்கொள்வான். உணராதவன், மனித செயலாகவே ஏற்றுக்கொள்வான்.

கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. நமக்குள் இருக்கும் சக்தியை நாம் உணர்ந்துகொள்ளும் நம்பிக்கை. இதனை அறிந்தவர்கள் ஞானிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கிறார்கள்.

2 கருத்துரைகள்:


நல்ல பதிவு நண்பரே .பகிர்ந்தமைக்கு நன்றி



All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.

Where can we go to find God if we cannot see Him in our own hearts and in every living being.
Swami Vivekananda

Read more: http://www.brainyquote.com/quotes/authors/s/swami_vivekananda_2.html#ixzz1dg4N1XUM




திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U