பிரதமரின் கழுதை

லாயிட் ஜார்ஜ் , என்பவர், முதல் உலகப் போர் காலத்தில், பிரிட்டனின் பிரதமராக இருந்தவர். வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர். முன்னொரு காலத்தில், அவரது மாமா, செருப்பு தைப்பவராக இருந்தார். அவரது தாய், தைத்த செருப்புகளை, ஒரு கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக் கொண்டு, விற்று வருவார். ஜார்ஜ் இன் இந்த பூர்விகத்தை, அவருக்கு வேண்டாதவர்கள் பலரும், சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு முறை ஜார்ஜ் அவர்கள், பொதுக் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒருவர்,

"கழுதை வண்டி என்னவாயிற்று?" என்று நக்கலாகக் கேட்டார்.

இதற்கு ஜார்ஜ் பொறுமையாக,

"வண்டியை விறகாகப் பிளந்து போட்டு வெகு நாட்களாகிறது.ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அந்தக் கழுதை இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதன் குரலைத் தான் சற்று முன்பு கேட்டோம்." என்று பதிலளித்தார்.

1 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U