விவேகானந்தரின் படிப்பு

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நூலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த நூலகரிடம், ஒரு புத்தகத்தின் தலைப்பைக் குறிப்பிட்டு, அந்தப் புத்தகத்தை படிக்க எடுத்துத் தருமாறு கேட்டார். நூலகரும், மிகுந்த சிரமப்பட்டு, வெகு நேரம் தேடி, அந்த புத்தகத்தை எடுத்துத் தந்தார்.

விவேகானந்தர், சிறிது நிறத்திலேயே அந்தப் புத்தகத்தை நூலகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

நூலகருக்கு கடுமையான கோபம் வந்தது. தான் வெகு சிரமப் பட்டு தேடி எடுத்துத் தந்த புத்தகத்தை, இவன் படிக்காமல், சிறிது நேரத்திலேயே கொடுத்துவிட்டானே என்று ஆதங்கபப்ட்டார். அதனை நேரடியாக விவேகானந்தரிடம் கூறினார்.

"என்னய்யா நன் எவ்வளவு சிரமப் பட்டு அந்தப் புத்தகத்தை உமக்குத் தேடி எடுத்துக் கொடுத்தேன்? நீங்கள் அதனைப் படிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டீர்களே? ஏன் இப்படி என் நேரத்தை வீனாக்கிநீர்கள்?" என்று விவேகானந்தரிடம் கத்தினார்.

"ஐயா! அந்தப் புத்தகத்தை நான் முழுமையாக படித்துவிட்டேன். அதிலிருந்து எதைக் கேட்டாலும் என்னால் சொல்ல முடியும்." என்றார் விவேகானந்தர் பொறுமையாக.

நூலகரும் விடுவதாக இல்லை. அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி கேள்வி கேட்கத் தொடங்கினார். அத்தனைக் கேள்விகளுக்கும் விவேகனந்தர் சளைக்காமல், அனாயசமாக பதிலளித்தார்.

நூலகருக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "இத்தனைப் பெரிய புத்தகத்தை எப்படி சிறிது நேரத்தில் படித்து முடிக்க உங்களால் முடிந்தது?" என்று கேட்டார்.

"சிலர் வார்த்தை வார்த்தையாகப் படிப்பார்கள். சிலர் பாரா பாராவாகப் படிப்பார்கள், சிலர் பக்கம் பக்கம் பக்கமாகப் படிப்பார்கள். புத்தகம் புத்தகமாகப் படிப்பது என்னுடைய வழக்கம்." என்று புன்னாகையுடன் கூறினார் விவேகனந்தர்.

இந்த விஷயத்தில் விவேகாந்தர், மக்களுக்கு சொல்லும் கருத்து என்ன?

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒன்றைப் படிப்பது என்பது, மூளை சம்பந்தப்பட்டது அல்ல, மனது சம்பந்தப் பட்டது.

விவேகானந்தர் அந்தப் புத்தகத்தை கடமைக்காகப் படிக்கவில்லை.ஒரு தவம் போலச் செய்தார். அவரது, கவனம் முழுவதும் அந்தப் புத்தகத்திலேயே இருந்தது. அவரது மனம் முழுமையாக, அந்தப் புத்தகத்திலேயே ஈடுபட்டிருந்தது. அதனால்தான், அவரால், அத்தனை சீக்கிரமாக படித்து முடிக்க முடிந்தது.

அதாவது நாம் செய்யும் எந்தவொரு பணியையும், முழு மனதுடனும், ஈடுபாடுடனும் செய்தால், விரைவாகவும் சிறப்பாகவும் செய்துவிட முடியும்.

இன்றைய குழந்தைகள், பள்ளிப் பாடங்களை, ஈடுபாடு இல்லாமலும், கடமைக்காகவும் மட்டுமே படிக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை, மனப்பாடம் செய்து பரீட்ச்சையில் எழுதி, நல்ல மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் இருக்கிறது. இத்தகைய செயல்களால், கல்வி கற்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. பாடங்களின் கருத்துகளை உணராமல், கல்வி கற்கும் நோக்கமும் நிறைவேறாமல், யாருக்கு என்ன பயன்?

கல்வி என்பது, மாணவர்களுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தர வல்லது. அதனை வெறும் கடமையாகச் செய்யாமல், ஆத்மார்த்தமாக, முழு மனதோடும், ஈடுபாடோடும், செய்தால் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும்.இதனால்தான், இந்தியக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

1 கருத்துரைகள்:


நல்ல பகிர்வு. இதை என் மகனுக்குப் படித்துக் காட்டினேன்


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U