வாழ்வின் சுவை

ஒரு முறை சொர்க்கத்தில், ஜைன துறவி, புத்த துறவி, சூபி ஞானி, ஆகிய மூவரும் சந்திக்கின்றனர். அங்கு மூன்று அழகான ஆசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. மூன்று ஞானிகளும் ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்கின்றனர்.

ஜைனத் துறவி, கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஜென் துறவி, கண்களை திறந்துகொண்டு, மெளனமாக அமர்ந்திருக்கிறார். சூபி ஞானி, முகம் மலர, புன்னைகையுடன் வீற்றிருக்கிறார்.

மூவரும் ஒருவரோடொருவர் பேசவில்லை.. ஒரு நீண்ட மௌனம் அங்கு நிலவியது. அதைத் தொடந்து, ஒரு அழகிய தேவதை அங்கு தோன்றியது. அதன் கையில் ஒரு தாம்பாளம். அதில், ஒரு தங்கக் கிண்ணத்தில், சிவந்த பழரசம் நிரம்பியிருந்தது.

புன்னகையுடன் அந்த தேவதை, "இதுதான் வாழ்கையெனும் ஜீவரசம்" என்று மூன்று ஞானிகளையும் பார்த்துக் கூறுகிறது.

இதனைக் கேட்ட ஜைனத் துறவி, "நான் இதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.வாழ்கை என்பதே துன்பம்,. உலகமே துக்கமயமானது. வாழ்வின்போது செய்யும் செயலகலாகிய  கர்மவினைதான், நாம் அனுபவிக்கக் கூடிய பெருந்துன்பங்களுக்கு எல்லாம்  காரணம்.இதன் வாடை கூட என் மீது படக் கூடாது." என்று ஒதுங்கிச் சென்றுவிட்டார்.

தேவதை அடுத்தபடியாக ஜென் துறவியின் பக்கம் திரும்பியது. "எதையும் சுவைத்துப் பார்க்காமல் மறுத்துவிட முடியாது.ஒரேயடியாக மறுப்பதோ, அதே சமயம் ஏற்பதோ, தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக, சிறிதளவு எடுத்துக்கொண்டு, பின்பு ஒதுக்கி விடவேண்டும்." என்று கூறியபடி, கிண்ணத்தை எடுத்து சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டார்.

"அப்பப்பா என்னவொரு கசப்பு. ஜைனத் துறவி சொன்னது போல், இது கொடும் துயரம்தான். எனினும் இதனைக் குடித்துப் பார்ப்பதே நம் கடமை. குடித்த பிறகு, சுவையில் மூழ்கிவிடாமல், ஒதுக்கிவிடுவதுதான் சரி" என்றார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சூபி ஞானி, அமைதியாக எழுந்து வந்து, கிண்ணத்தை எடுத்து, ஒரே மூச்சில், மொத்த திரவத்தையும் குடித்துமுடித்துவிட்டார்.

அவரது,முகம் முழுக்க சிரிப்பும், பூரிப்பும் நிரம்பியிருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஆசனத்தில் சாய்ந்துவிட்டார். ஜீவரசம் எப்படியிருந்தது? அதன் சுவை இனிப்பா? கசப்பா? எதையுமே கூறவில்லை. அமைதியாக இருந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரு துறவிகளும், "எப்படியிருந்தது ஜீவரசம்? உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்." என்று சூபி ஞானியிடம் வினவினர்.

"இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வாழக்கையை அப்படியே மொத்தமாக அருந்திவிட வேண்டும். அப்போதுதான் அது என்ன, எப்படிபட்டது என்பது நமக்குத் தெரியும். தெரிந்துகொண்ட பிறகு, சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. கொஞ்சம் கூட சுவைக்காமலோ, அல்லது ஒரு பகுதியை மட்டும் அருந்திவிட்டோ, அது எத்தன்மையது என்று கூறமுடியாது. அதனை முழுமையாக அனுபவித்த பிறகே அதன் தன்மையை உணர முடியும்." என்றார்.

வாழ்கை என்பது இப்படித்தான். ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறோம். நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே அதுவும் நமக்குத் தெரிகிறது.

துன்பமாகப் பார்த்தால், நம் வாழ்வில் நடக்கும் துன்பங்களே பெரிதாகத் தெரியும்.இன்பங்களை நம்மால் உணர முடியாது. அதற்காக நம்மால் வாழ்கையை ஒதுக்கி விடவும் முடியாது. இன்பமோ, துன்பமோ, வாழ்வது ஒன்றே வழி.

வாழ்கையை இன்பம் துன்பம் என்று பகுத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.இரண்டும் கலந்ததே வாழ்கை.எதோ ஒன்றை மட்டும் நாம் எடுத்துகொள்ள முடியாது.இதுவே நிஜம். அதனால், வாழ்கை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாடு வாழ்கையின் இன்ப துன்பங்களுக்கு மட்டுமல்ல. அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தும். எந்தவொரு உணர்ச்சியையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காதல், காமம், பாசம், நட்பு, கோபம், என்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒன்றுபோல் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த உணர்ச்சிகளின் கலவையே வாழ்கை.இவைஅனைத்தும் சரி விகிதத்தில் கலக்கும்போதுதான், வாழ்கையின் சுவை சிறந்திருக்கும். உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என்று பல பதார்த்தங்கள் கலந்து தயாரிக்கப் படும் உணவில், ஏதோவொரு பதார்த்தம் மட்டும் அதிகமாகச் சேர்க்கப் பட்டிருந்தால், அந்த உணவின் சுவையே மாறிவிடும். அதுபோல, வாழ்வில் எந்தவொரு சுவை மேலோங்கியிருந்தாலும், அதனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது.

இதில் விஷயம் என்னவென்றால், வாழ்கை எனும் உணவில், அனைத்து சுவைகளும் சரியாகவே கலக்கப் பட்டிருக்கும். நாம் எதனை அதிகம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் சுவையும் இருக்கும். துன்பங்களைப் பெரிதாக நினைத்தால், வாழ்கை கசப்பானதாகத் தெரியும். மகிழ்ச்சியை விரும்பினால், இனிப்பானதாகத் தோன்றும்.இரண்டையும் சமமாக பார்க்கும்போதே, அதன் உண்மையான சுவையை உணர முடியும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U