எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,  மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார். 

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம்.

2 கருத்துரைகள்:


This comment has been removed by the author.


அரியலூர் ரயில் விபத்திற்கு பொருப்பேற்று பதவியை ராஜினாமா செய்த இவரது நேர்மை ஒரு எடுத்துக்காட்டு. உங்கள் நியாயமான கோபம் எனக்கும் இருக்கிறது!


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U