அரசாங்கத்தின் அபத்தமான யோசனை

சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?

திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.

இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,  தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.

இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U