நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி.
கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.
சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.
"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.
"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.
"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.
"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.
"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.
எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.
நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.
ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.
சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
![My photo](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioFQMYP0xdfBYtoSGVqu2GnAdGzdms-uzilcZnqNXT429ddkSFT514exNpRf0T8uVmM-skXHDb8zXm6HYdQ7A41OqS3Dt9qJ4hWkmCN0zeX8-WeoAlvBEXCK7EMngl5Qg/s220/100_0041.jpg)
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
http://tamilthirati.corank.com/